Wednesday, October 17, 2007

எம்.பி.க்களின் வருகைப் பதிவேடு

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரும்பாலான நாள் சபைக்கு வந்தவர்களில் முதலிடம் பெறுவோர் இளம் எம்.பி.க்கள்தான்.

இந்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடர், பிப்ரவரி மாதம் 23-ம் தேதி ஆரம்பித்து, மே மாதம் 17-ம் தேதியோடு முடிவடைந்தது. மொத்தம் 32 அமர்வுகள் நடந்தன.

இதில் யார், யார் எத்தனை நாட்கள் வந்தனர் என்பதை இங்கே பாருங்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் கோவிந்தா, 32 அமர்வுகளில் வெறும் 2 நாள்தான் சபைக்கு வந்திருக்கிறார்.

மேற்கு வங்க ஹால்தியா தொகுதியின் எம்.பி. லட்சுமண்சேத் 3 நாட்கள் வருகை புரிந்திருக்கிறார்.

கோவா காங்கிரஸ் எம்.பி. அலேமியோ சர்ச்சில், சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. நடிகை ஜெயப்ரதா இருவரும் 4 நாட்கள் வருகை தந்து உள்ளனர்.

பா.ஜ.க.வின் நம்பிக்கை நட்சத்திரம் நடிகர் தர்மேந்திரா 5 நாட்கள் வந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் 13 நாட்கள் வந்திருக்கின்றனர்.

காங்கிரஸின் இளம் எம்.பி.க்கள் ஜோதிராதித்யா சிந்தியா 25 நாட்கள், நவின் ஜிண்டால் 25 நாட்கள், சச்சின் பைலட் 24 நாட்கள், ஜதின் பிரசாதா 22 நாட்கள், மிலிண்ட் தியோரா 26 நாட்கள், தீபேந்தர் சிங் ஹோடா 24 நாட்கள்.. என்று இளைய சமுதாயத்தினர் தங்களது வருகையைப் பதிவு செய்துள்ளனர்.

அதி நாட்கள் வந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

முன்னாள் IPS அதிகாரி நிகில்குமார் 31 நாட்களும், அருணாகுமார் வந்தவள்ளி 30 நாட்கள், மதுசூதன் மிஸ்திரி 32 நாட்கள், பிரேன்சிங் எங்க்டி 30 நாட்கள், கிஷோர் சந்திரதேவ் 30 நாட்கள், கிருஷ்ணதிராத் 30 நாட்கள், ஏக்நாத் கெய்க்வாட் 31, தேவேந்திர பிரசாத் யாதவ் 32 நாட்கள், நியமன எம்.பி.யான பிரான்சிஸ் பான்தோம் 32 நாட்களுமாக வருகை புரிந்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையே 22-தான். 545 பேரில் மீதிப் பேர் எத்தனை நாட்கள் வந்தார்களோ..? யாருக்குத் தெரியும்..?

Tuesday, September 18, 2007

எல்லோருக்கும் பொதுவாய் நன்றி!!!

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனை முறை நன்றியை வெளிப்படுத்துகிறோம்...?

யோசித்துப் பார்த்தால் நன்றியை கெட்ட வார்த்தையாக பாவித்து...

நன்றி மறந்த மனிதர்களாக மாறி...

நன்றியை ஒரு முறைக்கூட வெளிப்படுத்துவதில்லை என்று...

வெட்கப்பட்டு ஒப்புக் கொள்ள வேண்டும்...

இதனால் சகலமானவர்களுக்கும்...

சாலையில் வாகன போக்குவரத்தை சரிசெய்யும் மனிதருக்கும்...

தெருவில் குப்பைகளை கூட்டிப் பெருக்கும் மனிதருக்கும் ...

தபால் பட்டுவாடா செய்யும் மனிதருக்கும்...

காலையில் நாளிதழை வினியோகிக்கும் சிறுவனுக்கும்...

தேவையான நேரத்தில் தேவைப்படும் உதவியை செய்யும் நம் நண்பருக்கும்...

வீட்டு வேலைகளை செய்யும் பணியாளுக்கும்...

வாங்கிய கடனுக்கு குறைந்தபட்சம் வட்டியையாவது ஒழுங்காக கட்டும் மனிதருக்கும்...

அவ்வப்போது நம் பெற்றோருக்கும்...

கூச்சம் பார்க்காமல் நம் குழந்தைகளுக்கும்...

அன்றாடம் நம் மனைவிக்கும் என...

ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி நன்றி சொல்லப் பழகுவோம்.

Friday, September 14, 2007

Booku Vangalayoo Book



shopping


சென்னைன்னு பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...

ஆசியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் ஏரியாவான சென்னை டி நகர் உஸ்மான் ரோட்டில் ஆட்டோ எங்களை துப்பிச் சென்றது.

சர் சர் என்று எங்குதான் இவர்கள் செல்வார்களோ என்று யோசித்தபடியே அந்த ஜனத்திரளுக்குள் நானும் என் குடும்பத்தினரும் (மனைவி 3 குழந்தைகளும்) நுழைந்தோம்.

நாயுடு ஹாலில் குளு குளு என்று இருந்தது. ஆகா இந்த வெயிளுக்கு இங்கேயே டேரா போட்டுவிடலாம் என்று என் மனது நினைத்தது.

என்னுடைய இரு பெண்களும் தேவலோகத்திற்குள் நுழைந்துவிட்டது மாதிரி அங்குமிங்கும் பரபரவென அலைந்தார்கள். என் மனைவி அவர்களை காஸ்மெட்டிக் பிரிவுக்கு கூட்டிசென்றார்.

என் அருகில் இருந்த 4 வயது நிரம்பிய என் பையன் தன் இனிய குரலால் அப்பா ஜூஸ்ப்பா... என்றான். அப்பாடா உட்கார ஒரு ஏசி கிடைத்ததே என்று இருந்த எனக்கு பகீர் என்று இருந்தது. வெளியே வந்து வேகாத வெயிலில் கொஞ்சமும் சுத்தமில்லாத அந்த ஜூஸ் சென்றில் சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக் குடித் தோம்.

சுலையாக 30 ரூபாய் காணமல் போனது. அப்படியே பராக்கு பார்த்தப்படி பிளாட்பாரத்தில் நடந்தோம். விதவிதமான மனிதர்கள் ஏதோ ஒன்றை அடைய பரபர என்று சென்றுகொண்டிருந்தார்கள்.

தீடிரென்று யாரோ ஒருவர் தொட்டு அழைப்பது போல் இருந்தது. திரும்பினேன். திடகார்த்திரமாய் ஒருவர், சார் ஒரு 5 ரூபாய் கொடுங்கள் என்று அதிகாரமாய்க் கேட்டார். வெளியூரிலிருந்து வந்த எனக்கு சென்னையின் இந்த புதுவித பிச்சை அதிர்ச்சியடைய வைத்தது.

மனதிலுள்ள பயத்தை மறைத்துக்கொண்டு சில்லரை இல்லப்பா என்றேன். என்னை மேழும் கீழுமாக ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு வந்துட்டாங்க பர்சேஸ் பண்ண என்று சொல்லியிருப்பானோ என்று நினைத்தபடி வேகமாக நடையைக் கட்டினேன்.

கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து நாயுடு ஹாலுக்குள் நானும் என் பையனும் நுழைந்தபோது, என் மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு சின்ன பிரவுன் கலர் கவரை எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

என்னம்மா அது என்றேன். பெரிய மகள் வேகமாக கவரை பிரித்துக் சின்னமாக ஒரு பாட்டிலை எடுத்துக் காண்பித்தாள். என்ன இது என்றேன். இது தாம்பா லேட்டஸ்ட்டாக வந்த நெயில் பாலிஸ் என்றாள். விலை கூட கம்மிதாம்பா, ஒன்லி 62 ரூபீஸ் என்றாள்.

ஏற்கனவே என் மகன் கொடுத்த டார்ச்சரில் டைரி மில்க்காகவும், சூஸ் ஆகவும் சுமார் 70 ரூபாய் காலியாய் இருந்தது. அத்தர் பாட்டில் மாதிரி இருக்கும் இதற்கு அறுபத்திரண்டா என்று மனம் தந்தி அடித்தது. குடும்பஸ்தனுக்கு இதெல்லாம் சகஜம் என்று தேற்றிக்கொண்டேன்.

எங்கம்மா அம்மாவைக் காணோம் என்றேன். அம்மா பர்ஸ்ட் பிளோரில் இருக்கும் சாரி சென்ட்டரில் இருக்காங்க, என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது என் இல்லாள் முகம் முழுக்க புன்னைகையுடனும், கை நிறைய பைகளுடனும் வந்தாள்.

வந்த வேகத்தில், நம்ம ஊரில் கூட இவ்வளவு சீப்பாக இருக்காதுங்க. இங்க ரொம்ப சீப்பா இருக்கு, அதே சமயம் குவாலிட்டியாகவும் இருக்கு. பார்த்தா நம்ப மாட்டீங்க நா எடுத்த 7 சேலையும், மேட்சிங் பிளசும் வெறும் ஏழாயிரத்து ஐந்நூறுன்னா உங்களால நம்ப முடியுதா? என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, எனக்கு பீ.பியினால் தலை சுத்துதா இல்ல இதைக் கேட்டதுனாலயா தெரியல.

ஒரு வழியா ட்ரைனில் மறுநாள் காலையில் ஊர் வந்து சேர்ந்தோம். ஒரு வெள்ளை பேப்பிரில் கணக்கு போட்டதுல போகுவரத்து ஆட்டோ, சூஸ் அது இதுன்னு பார்த்ததுல அதிகமில்லை ஜென்டில்மேன் வெறும் ரூபாய் 22332.50 பைசாதான் ஆச்சு. ஒன்லி 2 டேஸ் சென்னையில் இருந்ததோட எபக்ட்.

சென்னைன்னு பேரைக் கேட்டாலே இப்ப எனக்கு சும்மா அதிருதில்ல...

Tuesday, September 11, 2007

மைக்ரோ கதை

மைக்ரோ கதை

ஒரு விவசாயக் கல்லூரி மாணவன் கிராமத்துக்குச் சென்றான்। அங்கு ஒரு விவசாயியைச் சந்தித்துச் சொன்னான்:

''உங்கள் விவசாய முறைகள் காலம் கடந்தவை।நான் சொல்வது போல் விவசாய முறைகளைப் பின்பற்றி விவசாய முறைகளை செய்தால் இதோ இந்த மரத்திலிருந்து நீங்கள் ஆண்டுக்கு நூறு மூட்டை ஆப்பிள் கிடைக்கிற ஆச்சிரியத்தை அடைவீர்கள்.''

''ஆமாம்... ஆச்சிரியமடைவேன்।''

"என்ன சொல்கிறீர்கள்। நான் கூறுவதை ஒப்புக்கொள்கிறீர்களா?'' என்றான் மாணவன்.

விவசாயி சொன்னார்,''ஆமாம் ஆச்சர்யமாகத்தானே இருக்கும்। இந்த பேரிக்காய் மரத்தில் ஆப்பிள் காய்த்தால்...''

கொசுறு கடி :

சென்ட்ரல் ஸ்டேஷன் சாக்ரடீஸ் கல்கத்தா சிட்டியில் வாழலாம். ஹைதராபாத் சிட்டியில வாழலாம். எலக்ட்ரிசிட்டியில வாழமுடியுமா?

ரசித்த உலக சினிமா

ரசித்த உலக சினிமா

ரூவாண்டா ஹோட்டல்

மனித உணர்வுகள் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தும் அழகிய
திரைப்படம் . இரண்டு பிரிவினர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அந்த ஊரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலைப்பார்க்கும் பால் என்பவர் எதிர் பிரிவினரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கைப்பிடிக்கிறார்।

அவர்களின் காதலின் சின்னமாக மூன்று குழந்தைகள்.தீடுரென ஏற்பட்ட இனப்பிரச்சனையால் பால் மனைவி வகையினரைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள்।மீதமுள்ளவர்கள் அடைக்கலம் தேடி, அந்த ஹேட்டலுக்கு வருகிறார்கள், கலவரக்காரர்களிடமிருந்து பால் அவர்களை காப்பற்றுவதே படம்.

சூழ்நிலைக் கைதிதான் நாம் அனைவரும் என்பதை வெகு அழகாக புரியவைக்கிறார்கள்।கலவரத்தால் குடும்பங்கள் சிதறும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கின்றன.

பிரச்சனைகளை பால் எதிர் கொண்டு சமாளிக்கும் விதத்தை நாம் நம் வாழ்வில் பாடமாக படிக்க வேண்டிய ஒன்று.எந்த நிலையிலும் கலங்காமல் சூழ்நிலைக்கேற்றபடி நம்மை மாற்றிக்கொண்டு நம் இலக்கை அடையவேண்டும் என்ற பாடத்தையும் மறைமுக
மாக இப்படம் உணர்த்துகிறது।

படத்தின் இறுதிக்காட்சியில் பால் மனைவி சகோதரின் குழந்தையை அகதிகள் முகாமில் தேடி மீட்டெடுக்கும் காட்சி கல் நெஞ்சக்காரர்களை
யும் கண்ணீர் சிந்தவைக்கிறது।

அதைத்தொடர்ந்து வரும் பாடல் நம் மனதை இனம்தெரியா வேதனையில் ஆழ்த்துகிறது।

நம் வாழ்க்கை இவர்களுடன் ஒப்பிடும்போது நன்றாகவே கொடுத்துள்ளான் ஆண்டவன் என்று நினைக்கத் தோன்றுகிறது।

வாழ்க்கை வாழ்வதற்கே। இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொண்டால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும்।

Friday, September 7, 2007

பொறியியல் கல்லூரிகள்-இந்த வருட நிலைமை

பொறியியல் கல்லூரிகள்-இந்த வருட நிலைமை


பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடவடிக்கைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவு பெற்றன।

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், ப்ளஸ்டூ படிப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதாலும் பெரும்பாலான கல்லூரிகளில் பெருமளவு இடங்கள் நிரம்பியுள்ளது।

மொத்தமாக எட்டாயிரம் இடங்களே காலியாக உள்ளன। இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட குறைவு என்பதே ஆச்சரியம்தான்.

பி।இ।, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 18-ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு ஜூலை 18-ம் தேதியும், பிளஸ்டூ படிப்பின் தொழிற் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஜூலை 19 முதல் 21 வரையிலும், வெளி மாநில மாணவர்களுக்கு ஜூலை 22 முதல் 24ம் தேதி வரையிலும் கவுன்சிலிங் நடைபெற்றது. மேலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 23ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் 3 கல்லூரிகள், 10 அரசு கல்லூரிகள், 255 தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 63 ஆயிரத்து 751 இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடைபெற்றது।

இதில் முதற்கட்டத்தில் 20 ஆயிரத்து 231 மாணவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 21 ஆயிரத்து 968 மாணவர்களுக்கும், மூன்றாம் கட்டத்தில் 11 ஆயிரத்து 238 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன।

கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டவர்களில் முதற்கட்டத்தில் 4,969 மாணவர்களும், இரண்டாம் கட்டத்தில் 11619 மாணவர்களும், மூன்றாம் கட்டத்தில் 14321 மாணவர்களும் என மொத்தம் 14,331 மாணவர்களும் என மொத்தம் 30,919 மாணவர்கள்(36,41 சதவிகிதம்) கவுன்சிலிங்கிற்கு வரவில்லை।

மேலும் கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் முதல் கட்டத்தில் 131 மாணவர்கள், இரண்டாம் கட்டத்தில் 200 மாணவர்கள், மூன்றாம் கட்டத்தில் 227 மாணவர்கள் என 558 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்யவில்லை।

இதையடுத்து நடைபெற்ற பிளஸ்டூ துணைத் தேர்வு மூலமாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் 390 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன। இதையடுத்து 9,924 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

பிளஸ்டூ படிப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்காக கூடுதலாக 1800 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன। இந்த இடங்களுக்காக நடைபெற்ற கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.

சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்த இடங்களே நிரப்பப்படாமல் உள்ளன।

பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதும், பிளஸ்டூ படிப்பில் தொழிற் கல்வி மாணவர்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டதும்தான் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது।

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பது இனிமேல்தான் தெரிய வரும்। சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக், எம்.ஐ.டி. ஆகிய மூன்று கல்லூரிகளில் நூறு சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன.


இத்துடன் சென்னையில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி ஈஸ்வரி பொறியியல் கல்லூரி ஜேப்பியார் பொறியியல் கல்லூரிஎம்।என்।எம்.ஜெயின் பொறியியல் கல்லூரி செயிண்ட் ஜோஸப் பொறியியல் கல்லூரி ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. கோவை தொழில் நுட்பக் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், தஞ்சை ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரி தஞ்சை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம் ஸ்ரீசிவசுப்ரமணியநாடார் பொறியியல் கல்லூரி வள்ளியம்மை பொறியியல் கல்லூரி கிருஷ்ணகிரியில் உள்ள பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, விருதுநகர் மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி என மொத்தம் 23 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் நூறு சதவிகித இடங்கள் நிரம்பிவிட்டன.


மேலும் 63 கல்லூரிகளில் 95 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரையிலான இடங்கள் நிரம்பியுள்ளன।

நாமக்கல் சி।எம்.எஸ் பொறியியல் கல்லூரி கன்னியாகுமரி ஜெயமாதா பொறியியல் கல்லூரி திருநெல்வேலி ஜோசுரேஷ் பொறியியல் கல்லூரி சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி ராஜாஸ் பொறியியல் கல்லூரி நாமக்கல் உதயா பொறியியல் கல்லூரி கன்னியாகுமரி லார்டு ஜெகன்நாத் பொறியியல் கல்லூரி கே.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரி நாகர்கோவில் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி பாளையங்கோட்டை பி.எஸ்.என். பொறியியல் கல்லூரிஆகிய 10 கல்லூரிகளில் 25 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் 3 கல்லூரிகள், திருச்சி அண்ணா பல்கலக்கழகக் கட்டுப்பாட்டில் 7 கல்லூரிகள், கோவை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் 11 கல்லூரிகள் என மொத்தம் 21 புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது।

வரும் 10ம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் வகுப்புகள் துவங்கவுள்ளனவாம்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

தினகரன்-07-09-2007

இன்றைய தலைப்புச் செய்திகள்

ரஜினி, கமலுக்கு திரைப்பட விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவுடன் கூட்டுப் போர் பயிற்சிக்கு கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்புநாடாளுமன்ற வளாகத்தில் எம்।பி.க்கள் தர்ணா

உச்சநீதிமன்றத்தில் தடை பெறத விளம்பரப் பலகைகளை அகற்றலாம்।உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை வரும் 19ம் தேதி சி।ஐ.டி.யூ நடத்துகிறது.

அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்கில் பதவி உயர்வு।

அஞ்சல் துறை பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி ஒன்றை நடத்துகிறது।

அனுமதி இல்லாத இடங்களில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை। - தமிழக அரசு உறுதி.

சிவில் நீதிபதிகளுக்கான வயது வரம்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி।

வாரிசுதாரர்களுக்கு திருமணமானாலும் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது।

I।C.F.-ல் லஞ்சம் வாங்கிய ஊழியரைப் பிடித்த சி.பி.ஐ.அதிகாரிகள் சிறை வைப்பு. போலீஸார் வந்து சி.பி.ஐ.யினரை காப்பாற்றினர்.

ஜம்போ பாஸ்போர்ட் வழங்கும் பணி தொடங்கியது। முதல் பாஸ்போர்ட்டை நடிகர் கார்த்தி பெற்றுக் கொண்டார்.

சென்னை மத்திய குற்றப் பிரிவு போலிஸில் 4 உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்।

உலகிலேயே பழமையான ·பேரி குயின் ரயில் இன்ஜின் சென்னையில் வெள்ளோட்டம் விடப்பட்டது।

தவறான மாத்திரையை சாப்பிட்டுவிட்டேன்। தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை - தடகள வீராங்கனை சாந்தி தகவல்.

16 நிறுவனங்களுடன் இணைந்து கல்வி, மருத்துவ வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - இண்டல் நிறுவனம் அறிவிப்பு।

கூடலூர் மலையில் தரையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் நிலச்சரிவு அபாயம்.
சினிமா இயக்குநர் சரண் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான ஆர்ட் டைரக்டரின் வீட்டில் போலீஸ் திடீர் சோதனை।

மாபெரும் கட்சியை வழிநடத்தும் எனக்கு பூச்சாண்டி காட்டுகிறார் கருணாநிதி-ஜெயலலிதா அறிக்கை।

ஜெயலலிதாவுக்கு நன்றி-கருணாநிதி அறிக்கை।

ராமதாஸ் கோரிக்கைக்குப் பதில் - சமச்சீர் கல்வி முறை அடுத்தாண்டு அமலாகும் - கருணாநிதி அறிக்கை।

பண்டிகைகளை முன்னிட்டு ரேஷனில் பருப்பு, எண்ணெய் ஜனவரிவரை வாங்கலாம்।

உத்தரகாண்டில் கடும் மழை। நிலச்சரிவில் சிக்கி 15 பேர் மண்ணில் புதைந்தனர்.

சர்ச்சைக்கு உள்ளான ஓவியர் உசைனுக்கு விருதா? கேரள அரசுக்கு எதிர்ப்பு॥

ஜன்மாஷ்டமி விழா டி।சர்ட்டில் குஜராத் முதல்வர் மோடி கிருஷ்ணராக சித்தரிப்பு.

இஸ்ரோ நிலம் வாங்கிய விவகாரம் - எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் கேரள சட்டப் பேரவை ஒத்தி வைப்பு।

தாறுமாறாக காரை ஓட்டி 7 பேர் பலியான வழக்கு-தொழில் அதிபர் அலிஸ்டர் பெரைராவுக்கு 3 ஆண்டு ஜெயில்। மும்பை கோர்ட் தீர்ப்பு.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நீதிபதிகளை விசாரிக்கும் மசோதா। உயர்நீதிமன்றங்கள் கடும் எதிர்ப்பு.

95% சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள் - குடும்பத்துக்கு ஒருவர் ஆசிரியர் - குஜராத்தில் ஒரு அதிசய கிராமம்।

அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராய நாடாளுமன்றக் கூட்டுக் குழு - பாரதிய ஜனதா வலியுறுத்தல்।

அணு ஒப்பந்த விவகாரம் -- கூட்டுக் குழு பரிந்துரையை அரசு நிராகரிக்க முடியாது -- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதி।

புதிய பெரியாறு அணை கட்ட நிதி திரட்ட கேரள அரசு முடிவு - கேரள அமைச்சர் பிரேமச்சந்திரன் தகவல்।

ஊதிய உயர்வு இல்லாததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா அதிகரிப்பு -- 3 ஆண்டுகளில் 392 பேர் விலகல்।

விரைவில் கடற்படை சோதனை - நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை தயார்।

ராணுவ மேஜர் ஜெனரல் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் - விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு।

நாடு முழுவதும் 90 மாவட்டங்களில் சிறுபான்மை மக்களுக்காக சிறப்புத் திட்டம்। மத்திய அரசு அறிவிப்பு.

ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி இம்ரானிடம் 2-வது நார்கோ சோதனை -- மேலும் 10 பேர் சிக்கினர்।

பா।ஜ.க.வுடன் இனி உறவு இல்லை - மம்தா பானர்ஜி அறிவிப்பு.

மக்கள் தொலைக்காட்சி 2-ம் ஆண்டு துவக்க விழா।

சோனியாவை விமர்சித்த வழக்கு - உயர்நீதிமன்ற கிளையில் ஜெயலலிதா மனு - விசாரணை தள்ளி வைப்பு।

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரம நெரிசலில் 11 பேர் பலி।

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப் பணி கட்டாயமா?- மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு।

நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக காளியப்பன் நியமனம்।

நடிகர் சங்கத் தலைவர் பதவியை சரத்குமார் ராஜினாமா செய்தார்।

ஆசிய கோப்பை ஹாக்கி। அரை இறுதிக்கு ஜப்பான் தகுதி. வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்.

ஓவலில் அபார ஆட்டம் - பாராட்டு மழையில் ராபின் உத்தப்பா।

பெயர் குழப்பத்தால் ஆள் மாறாட்டம் - அப்பாவி பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை।

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிவி நடிகர் பிரட் தாம்ஸன் போட்டி।

நேபாள ரூபாயில் மன்னர் படம் நீக்கம்।

அதிபர் பதவியில் இருந்து அக்டோபர் 15-ல் முஷாரப் ராஜினாமா।

அந்தமானுக்கு கடத்த இருந்த ரூ।50 லட்சம் அபின் பாரிமுனையில் பறிமுதல்.

வரும் 15-ம் தேதிவரை வாக்காளர் பட்டியலுக்காக புகைப்படம் சமர்ப்பிக்கலாம் - இதுவே இறுதி வாய்ப்பு।

சென்னை பல் மருத்துவனையில் திடீர் மின் தடை - நோயாளிகள் தவிப்பு।

தமிழக இளைஞர் காங்கிரஸ¤க்கு 15 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க கட்சி தீவிரம் - தேர்தல் பொறுப்பாளர் தகவல்।

மருத்துவ மாணவர்கள் விஷயத்தில் வெளிப்படையான அணுகுமுறை - இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்।

போலீஸில் ஆஜரான 30 நிமிடத்தில் பூட்டிய வீட்டை உடைத்து கைவரிசை காட்டியவர் கைது।

இரட்டைக் கொலை வழக்கில் விடுதலையானவருக்கு 10 ஆண்டு சிறை - அப்பீல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு।

பணம் கேட்டு மிரட்டியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை।

குடும்பம் நடத்த மனைவி மறுப்பு - கணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை।

பெண்ணின் ஜாக்கெட்டைக் கிழித்த அ।தி.மு.க. பெண் பிரமுகர் உட்பட 3 பேர் கைது.

காதல் மனைவியை மீட்டுத் தர வாலிபர் போலீஸில் புகார்।

மண்ணெண்ணெய் அளவு குறைந்ததால் ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல் - பொதுமக்கள் ஆவேசம்।


பிட் நியூஸ் : சென்னை பரங்கிமலை ஜோதி தியேட்டரில் “புதுசா ஒரு அனுபவம்” - சிந்து, பாபிலோனா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம். தினசரி 4 காட்சிகள். காணத் தவறாதீர்கள்.

Thursday, September 6, 2007

மனதை உருக்கும் புகைப்படங்கள்

எனக்கு மெயிலில் வந்த சில மனதை உருக்கும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...


1962. A soldier shot by a sniper hangs onto a priest in his last moments.

1975. A woman and a girl falling down after the fire escape collapses.

Young rebel fighters from the Liberians United for Reconciliation and Democracy (LURD) patrol in Voinjama.


Phan Thị Kim Phúc known as Kim Phuc (born 1963) was the subject of a famous photo from the Vietnam war. The picture shows her at about age nine running naked after being severely burned on her back by a napalm attack.



1994. A man who was tortured by the soldiers since he was suspected to have spoken with the Tutsi rebels.



1987. A mother in South Korea apologizes and asks for forgiveness for his son who was arrested after attending a protest. He was protesting the alleged manipulations in the general elections.

1992. A mother in Somalia holds the body of her child who died of hunger.



2003. An Iraqi prisoner of war tries to calm down his child


2002. Soldiers and villagers in IRan are digging graves for the victims of the earthquake. A kid holds his father's pants before he is buried.

This is a famous picture, taken in 1930, showing the young black men accused of raping a Caucasian woman and killing her boyfriend, hanged by a mob of 10,000 white men। The mob took them by force from the county jail house. Another black man was left behind and ended up being saved from lynching. Even if lynching photos were designed to boost white supremacy, the tortured bodies and grotesquely happy crowds ended up revolting many.



This is the picture of a student/man going to work who has just had enough. The days leading up to this event thousands of protesters and innocent by standers were killed by their own government because the Chinese people wanted more rights. He tries to stop the tanks in Tiananmen Square by standing in front of them and climbed on the tank and hitting the hatch and yelling, the tank driver didn't crush the man with the bags as a group of unknown people came and dragged him away, we still don't know if the man is alive or dead as the Chinese government executed many of the protesters involved. China is still controlled by a communist regime, but while there are strong willed men like this the country still has hope.


Bosnian woman weeps next to the coffins of Muslim men and boys before their burial in Potocari, near Srebrenica, some 75 kilometers north of Sarajevo, on Saturday, July 10, 2004 as the city prepares for Sunday's funeral of 335 newly identified bodies of Muslims killed in the worst massacre of civilians since World War II।The slayings of up to 8,000 Muslim men and boys in July 1995 in Srebrenica at the hands of the Bosnian Serbs have come to symbolize Bosnia's devastating 3 1/2-year war.



1980. A kid in Uganda about to die of hunger, and a missionaire.

1982. Palestinian refugees murdered in Beirut , Lebanon






1957. The first day of Dorothy Counts at the Harry Harding High School in the United States . Counts was one of the first black students admitted in the school, and she was no longer able to stand the harassments after 4 days.



February 1, 1968. South Vietnam police chief Nguyen Ngoc Loan shots a young man, whom he suspects to be a Viet Kong soldier.


1963. Thich Quang Duc, the Buddhist priest in Southern Vietnam , burns himself to death protesting the government's torture policy against priests. Thich Quang Dug never made a sound or moved while he was burning.


1973. A few seconds before Chile 's elected president Salvador Allende is dead during the coup.



January 12, 1960. A second before the Japanese Socialist Party leader Asanuma was murdered by an opponent student.




1966। U.S. troops in South Vietnam are dragging a dead Vietkong soldier.

Thursday, August 23, 2007

கவியரசர் கண்ணதாசன் சொன்ன உண்மை

கடந்த சில நாட்களுக்கு முன் 'பெரியார்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய கலைஞர், சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி।மு.க. வெற்றி பெற்றதற்காக॥ அவ்வெற்றிக்கு அரும்பாடுபட்டவன் என்ற முறையில் தனக்குப் பரிசளிப்பதற்காக அண்ணா அவர்கள் கடை கடையாக ஏறி இறங்கி மோதிரம் ஒன்றை வாங்கி வந்து கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் தனக்கு அணிவித்ததாக பல்லாண்டு காலமாக சொல்லி வரும் ஒரு கதையைச் சொன்னார்..


ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை கவியரசர் கண்ணதாசன், தனது 'வனவாசம்' நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்।

நீங்கலும் படித்துப் பாருங்க॥

கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' புத்தகத்தில் 277-ம் பக்கம்

தலைப்பு : 47। கணையாழியும், கசப்பும்

(குறிப்பு : இங்கே 'அவன்' என்று கண்ணதாசன் தன்னைத்தானே குறிப்பிட்டுக் கொள்கிறார்)


"கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை, அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள் போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.
கருணாநிதி பேசுகிறார்। அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர் போல் பேசுகிறார்। இவ்வளவு பேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கெனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்।

அடுத்தாற்போல் அண்ணாதுரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்। காங்கிரஸை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக் கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்.

"நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை। எனக்கென்றுகூட நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித் தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்॥" கூட்டத்தில் பெருத்த கையலி.. 'கருணாநிதி வாழ்க' என்ற முழுக்கம். அவன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.

பெரிய ஜாதிக்காரனையும், சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான்।

அண்ணாதுரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார்। அவரை வரம்பு மீறி புகழ்ந்து கொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப் பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.

அவன் நேரே அவரிடம் போனான்। "என்ன அண்ணா॥ இப்படி சதி செய்துவிட்டீர்கள்?" என்று நேருக்கு நேரே கேட்டான்.

"அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு। அடுத்தக் கூட்டத்தில் போட்டு விடுகிறேன்॥" என்றார்.

"அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா॥?" என்று அவன் கேட்டான்।

"அட சும்மா இரு॥ அடுத்தத் தேர்தல் வரட்டும்। பார்த்துக் கொள்ளலாம்.." என்றார்.

அவன் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நடக்கலானான்।

அவன் கண்களில் நீர் மல்கிற்று। பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும் உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.

கட்சியிலும் அண்ணாதுரை மீதும் அவன் வைத்திருந்த பிடிப்பி நெல்லின் உமி சிறிது நீங்குவது போல நீங்கத் தொடங்கிற்று..."

அண்ணா உயிருடன் இருந்தபொழுதே 1961-லேயே இந்தப் புத்தகம் வெளிவந்துவிட்டது। தான் இறக்கின்றவரையிலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி மட்டும் அண்ணா கருத்து சொல்லவில்லையாம். காரணம், அவ்வளவு 'உண்மை'கள் இந்தப் புத்தகத்தில் குவிந்து கிடக்கின்றன. வாங்கிப் படித்துப் பாருங்கள்.

பதிப்பகம் : வானதி விலை ரூ.60.००

பின்குறிப்பு : கலைஞரும் இந்தப் புத்தகத்தைத் தான் இதுவரை படித்ததே இல்லை என்றே சாதித்து வருகிறார்.

Tuesday, August 14, 2007

கேபிள் டிவி தொழில்-அரசு ஜெயிக்குமா?

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்ற பெயரில் புதிய அரசு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கம்பிவட தொலைக்காட்சி சேவையை தமிழக அரசு தொடங்குவது சம்பந்தமாக கடந்த 11-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் "அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன்" என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்படும்.

இந்த நிறுவனத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரைத் தவிர நிதித்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத் துறைச் செயலாளர், எல்காட் நிர்வாக இயக்குநர், மின் வாரியத் தலைவர் கியோர் இயக்குநர்களாகப் பணி புரிவார்கள். இந்தப் புதிய அரசு நிறுவனம், தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் என்றும் அரசு ணையிட்டுள்ளது..." - இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாதம் 5 கோடி ரூபாய் வருவாய் தரும் சுமங்கலி கேபிள் விஷன் என்ற முன்னாள் பேரன்களின் சாம்ராஜ்யத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக தமிழக முதல்வரின் கண் ஜாடையில் இது உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எது ஜெயிக்கும் என்பது பிற்பாடுதான் தெரிய வரும் என்றாலும், இப்போதைக்கு முன்னாள் பேரன்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வீடு நேரடியாக டிவி நிகழ்ச்சிகளை காட்டும் டிடிஹெச் தொழில் நுட்பத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள்.

தங்களது டிடிஹெச் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய்விட்டால் அரசின் கேபிள் டிவி திட்டம் தோற்றதுபோல் ஆகிவிடுமே என்பதால், வினையை வினையாலே அறுப்போம், வாயால் வேண்டாம் என்று அடக்கமாக இருக்கிறார்கள்.

அவர்களின் முயற்சியிலும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் அரசே கேபிள் டிவி நடத்தினாலும் கட்டணச் சேனல்கள், தங்களது கட்டணங்களை இனிமேல் குறைத்துக் கொள்ளப் போவதில்லை. ஆளும் கட்சியின் அடிப்படைத் தொண்டராக இருக்கும் ராஜ்டிவியே, தனது கட்டணத்தை உயர்த்தும் நோக்கத்தில் இருக்கிறது.

அப்படியிருக்கும்பொழுது அனைத்து சேனல்களையும் மக்களுக்கு வழங்கவேண்டுமெனில் அரசு மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 175 ரூபாயையாவது வசூலித்தே தீர வேண்டும். அல்லாமல் கட்டணச் சேனல்கள் அல்லாத சேனல்களை மட்டுமே வழங்குவோம் என்று கூறினால் வெறும் 100 ரூபாய்க்குள் கேபிள் டிவி கட்டணத்தை அடக்கிவிடலாம்.

அப்படிச் செய்யும்பட்சத்தில் அரசு தரப்பு இல்லாத கேபிள் டிவி நிறுவனங்கள் கட்டணச் சேனல்களையும் போட்டி காரணமாக அரசுத் தரப்புக் கட்டணத்திலோ அல்லது அதைவிட சிறிய தொகை உயர்விலோ பொதுமக்களுக்கு வழங்க முன் வந்தால் அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெளிவாகவில்லை.

காரணம், தமிழகம் முழுவதும் அரசு மட்டுமே கேபிள் டிவி தொழிலைக் கையாளும் என்றோ, அரசிடம் இருந்துதான் மற்ற இடைநிலை முகவர்கள் கனெக்ஷன்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்பதையும் அரசுத் தரப்பு இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.

ஆக, அரசும், தனியாரும் இந்தத் துறையில் போட்டியிட ஆரம்பித்தால் நிச்சயமாக தனியார் துறைதான் ஜெயிப்பார்கள்.

காரணம், ஆட்சி மாற்றம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடந்தாலும் நடக்கும் என்பதால் தனியார் துறையினர் தங்களது கட்டணங்களை அரசுகளுக்காகக் குறைத்துக் கொண்டு ஒரு அரசு நல்ல பெயர் எடுக்க ஒத்துழைப்பார்கள் என்பதை நம்ப முடியாது. அதே போல் அரசுகளும் அந்தச் சேனல்களை ஒரு அளவுக்கு மேல் நெருக்கவும் முடியாது. காரணம், மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கும் நெருக்கம் அப்படி.

ஏற்கெனவே சென்னையில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளாக நம்பப்படும் ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு போன்ற இடங்களில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கம்தான் அதிகம்.

இந்தப் பகுதிகளில் தனியார் துறையிடம் அரசுத் துறையும் போரிட வேண்டுமெனில் அவர்களும் கட்டணங்களை உயர்த்தித்தான் தீர வேண்டும்.

அதே சமயம் அந்த இடத்தில் இருக்கும் குடிசை வீடுகளில் இருக்கும் வாக்காளர் பெருமக்களை மனதில் வைத்துக் கொண்டு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான்.

Sunday, August 12, 2007

கேபிள் டிவிக்கு தனி நிறுவனம்-தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் கேபிள் டிவி தொழிலில் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. கேபிள் டிவி கட்டணங்கள் மாநிலம் முழுவதிலும் ஒரே சீராக இல்லை. அதை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட காரணங்களினாலும் அரசியல் கட்சிகளிடையே வலுத்துக் கொண்டே வந்தன. அதிலும் குறிப்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சற்று அழுத்தமாகவே செல்கின்ற இடங்களிலெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இதுவரையிலும் அப்படியொரு கருத்தே இல்லை என்ற நிலையில் இருந்த தமிழக அரசு மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, தயாநிதி மாறன் தி.மு.க.விலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு யோசனை செய்து கேபிள் டிவியை அரசே நடத்தலாம் என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டது.

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. கேபிள் டிவி தொழிலை மின்வாரியத்தின் மூலம் தமிழக அரசே நடத்தலாம் என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "தமிழக அரசு சார்பில் கேபிள் டிவி இணைப்புகள் வழங்குவதற்கென்று தனியே ஒரு நிறுவனம் அமைக்கப்படும். சென்னை நகரைப் பொறுத்தவரை, நடைமுறையில் உள்ள கேபிள் டிவியில் கட்டண சேவைகளைப் பார்க்கும் ஏற்பாட்டு முறையைச் செய்யும் எம்.எஸ்.ஓ.(பன்முக ஏற்பாட்டு முறை ஆபரேட்டர்) போல செயல்படும். தமிழகத்தின் பிற பகுதிகளில் கேபிள் டிவி ஆபரேட்டராக அந்நிறுவனமே செயல்படும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளப்படும்.." என்று கூறப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல முடிவு என்றே சொல்ல வேண்டும்.

உலக வங்கியிடம் அதிக கடன் இந்தியாவுக்கு முதல் இடம்

இந்தியாவுக்கு கடந்தாண்டு வழங்கியதைவிட இந்த ஆண்டில் 169 சதவீதம் கூடுதலாக கடன் வழங்கியுள்ளது உலக வங்கி.

இந்தியாவுக்கு இந்த ஆண்டில் சலுகை அடிப்படையிலான சர்வதேச மேம்பாட்டு கூட்டமைப்புக் கடனாக ரூ.9512 கோடியும், மறு கட்டமைப்பு மேம்பாட்டு கடனாக ரூ.6150 கோடியும் ஆக மொத்தம் ரூ.15,662 கோடியை உலக வங்கியிடம் இருந்து இந்தியா கடனாகப் பெற்றுள்ளது.

உலக வங்கியிடம் இதுவரை இந்த அளவு பெரிய தொகையை வேறு எந்த நாடும் கடனாகப் பெற்றதில்லை. அதே போல் உலக வங்கியின் தனியார் முதலீட்டுப் பிரிவு இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.2780 கோடி வழங்கியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் உலக வங்கி கடன் மூலம் இரண்டு பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தமிழகத்துக்கு நீர் நிலைகள் புனரமைப்பு, புதுப்பிப்பு, புதிதாக நிறுவுதல் போன்ற பணிகளுக்காக ரூ.1845 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு ரூ.775 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பீகாரில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.259 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் பீகாரின் கிராமப்புறங்களில் சுய நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

உலக வங்கி கடனில் கிராம கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கடன்களில் மூன்றில் ஒரு பகுதி இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களின் சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் மேலும் ரூ.260 கோடி கடனை இந்தியாவுக்கு உலக வங்கி அனுமதித்துள்ளது.

ஆந்திரா அரசின் கிராம ஏழ்மை ஒழிப்புத் திட்டத்துக்காக இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 57 லட்சம் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள கடன் தொகை மூலம், ஏழைப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றும் அவர்கள் சுய சார்பு அடைவர் என்றும் உலக வங்கி சொல்கிறது.

வாங்குங்க.. வாங்குங்க.. வாங்கிக்கிட்டே இருங்க..

கட்டப் போறது எப்படியும் நீங்க இல்லையே.. நாங்கதான..

அறிமுகம்

நேர்வழி, குறுக்கு வழி என்று எந்த வழியும் உலகில் இல்லை. ஒரே வழிதான். அது நமது அறிவைப் பயன்படுத்தும் வழி. பயன்படுத்துவதில் உள்ள வித்தியாசங்கள்தான் ஒரு மனிதனை சாணக்கியனாகவும், ஒரு மனிதனை தோல்வியுற்றவனாகவும் காட்டுகிறது.

எனக்குப் பிடித்ததை, நான் படித்ததை, நான் விரும்பியதை, நான் விரும்புவதை அப்படியே தருகிறேன். இது எனக்கொரு வித்தியாசமான அனுபவம்.. பகிர்தலை ஒருவித த்ரில்லோடு செய்யப் போகிறேன்..

ஆனால் எல்லாவற்றிலும் நேர்மையாக.. மாறாத கொள்கையாக.. இதில் சாணக்கியத்தனம் என்ற ஒன்றுமில்லை.. முயன்றால் புரிந்துவிடும் எல்லாமே.. அந்த முயற்சியில்தான் 'சமுத்திரகுப்தன்' பெற்ற வெற்றியும் இருக்கிறது..