Thursday, August 23, 2007

கவியரசர் கண்ணதாசன் சொன்ன உண்மை

கடந்த சில நாட்களுக்கு முன் 'பெரியார்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய கலைஞர், சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி।மு.க. வெற்றி பெற்றதற்காக॥ அவ்வெற்றிக்கு அரும்பாடுபட்டவன் என்ற முறையில் தனக்குப் பரிசளிப்பதற்காக அண்ணா அவர்கள் கடை கடையாக ஏறி இறங்கி மோதிரம் ஒன்றை வாங்கி வந்து கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் தனக்கு அணிவித்ததாக பல்லாண்டு காலமாக சொல்லி வரும் ஒரு கதையைச் சொன்னார்..


ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை கவியரசர் கண்ணதாசன், தனது 'வனவாசம்' நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்।

நீங்கலும் படித்துப் பாருங்க॥

கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' புத்தகத்தில் 277-ம் பக்கம்

தலைப்பு : 47। கணையாழியும், கசப்பும்

(குறிப்பு : இங்கே 'அவன்' என்று கண்ணதாசன் தன்னைத்தானே குறிப்பிட்டுக் கொள்கிறார்)


"கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை, அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள் போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.
கருணாநிதி பேசுகிறார்। அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர் போல் பேசுகிறார்। இவ்வளவு பேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கெனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்।

அடுத்தாற்போல் அண்ணாதுரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்। காங்கிரஸை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக் கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்.

"நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை। எனக்கென்றுகூட நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித் தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்॥" கூட்டத்தில் பெருத்த கையலி.. 'கருணாநிதி வாழ்க' என்ற முழுக்கம். அவன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.

பெரிய ஜாதிக்காரனையும், சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான்।

அண்ணாதுரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார்। அவரை வரம்பு மீறி புகழ்ந்து கொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப் பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.

அவன் நேரே அவரிடம் போனான்। "என்ன அண்ணா॥ இப்படி சதி செய்துவிட்டீர்கள்?" என்று நேருக்கு நேரே கேட்டான்.

"அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு। அடுத்தக் கூட்டத்தில் போட்டு விடுகிறேன்॥" என்றார்.

"அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா॥?" என்று அவன் கேட்டான்।

"அட சும்மா இரு॥ அடுத்தத் தேர்தல் வரட்டும்। பார்த்துக் கொள்ளலாம்.." என்றார்.

அவன் அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நடக்கலானான்।

அவன் கண்களில் நீர் மல்கிற்று। பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும் உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.

கட்சியிலும் அண்ணாதுரை மீதும் அவன் வைத்திருந்த பிடிப்பி நெல்லின் உமி சிறிது நீங்குவது போல நீங்கத் தொடங்கிற்று..."

அண்ணா உயிருடன் இருந்தபொழுதே 1961-லேயே இந்தப் புத்தகம் வெளிவந்துவிட்டது। தான் இறக்கின்றவரையிலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி மட்டும் அண்ணா கருத்து சொல்லவில்லையாம். காரணம், அவ்வளவு 'உண்மை'கள் இந்தப் புத்தகத்தில் குவிந்து கிடக்கின்றன. வாங்கிப் படித்துப் பாருங்கள்.

பதிப்பகம் : வானதி விலை ரூ.60.००

பின்குறிப்பு : கலைஞரும் இந்தப் புத்தகத்தைத் தான் இதுவரை படித்ததே இல்லை என்றே சாதித்து வருகிறார்.

Tuesday, August 14, 2007

கேபிள் டிவி தொழில்-அரசு ஜெயிக்குமா?

தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்ற பெயரில் புதிய அரசு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கம்பிவட தொலைக்காட்சி சேவையை தமிழக அரசு தொடங்குவது சம்பந்தமாக கடந்த 11-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் "அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன்" என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்படும்.

இந்த நிறுவனத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரைத் தவிர நிதித்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத் துறைச் செயலாளர், எல்காட் நிர்வாக இயக்குநர், மின் வாரியத் தலைவர் கியோர் இயக்குநர்களாகப் பணி புரிவார்கள். இந்தப் புதிய அரசு நிறுவனம், தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் என்றும் அரசு ணையிட்டுள்ளது..." - இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாதம் 5 கோடி ரூபாய் வருவாய் தரும் சுமங்கலி கேபிள் விஷன் என்ற முன்னாள் பேரன்களின் சாம்ராஜ்யத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக தமிழக முதல்வரின் கண் ஜாடையில் இது உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எது ஜெயிக்கும் என்பது பிற்பாடுதான் தெரிய வரும் என்றாலும், இப்போதைக்கு முன்னாள் பேரன்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வீட்டுக்கு வீடு நேரடியாக டிவி நிகழ்ச்சிகளை காட்டும் டிடிஹெச் தொழில் நுட்பத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள்.

தங்களது டிடிஹெச் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய்விட்டால் அரசின் கேபிள் டிவி திட்டம் தோற்றதுபோல் ஆகிவிடுமே என்பதால், வினையை வினையாலே அறுப்போம், வாயால் வேண்டாம் என்று அடக்கமாக இருக்கிறார்கள்.

அவர்களின் முயற்சியிலும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் அரசே கேபிள் டிவி நடத்தினாலும் கட்டணச் சேனல்கள், தங்களது கட்டணங்களை இனிமேல் குறைத்துக் கொள்ளப் போவதில்லை. ஆளும் கட்சியின் அடிப்படைத் தொண்டராக இருக்கும் ராஜ்டிவியே, தனது கட்டணத்தை உயர்த்தும் நோக்கத்தில் இருக்கிறது.

அப்படியிருக்கும்பொழுது அனைத்து சேனல்களையும் மக்களுக்கு வழங்கவேண்டுமெனில் அரசு மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 175 ரூபாயையாவது வசூலித்தே தீர வேண்டும். அல்லாமல் கட்டணச் சேனல்கள் அல்லாத சேனல்களை மட்டுமே வழங்குவோம் என்று கூறினால் வெறும் 100 ரூபாய்க்குள் கேபிள் டிவி கட்டணத்தை அடக்கிவிடலாம்.

அப்படிச் செய்யும்பட்சத்தில் அரசு தரப்பு இல்லாத கேபிள் டிவி நிறுவனங்கள் கட்டணச் சேனல்களையும் போட்டி காரணமாக அரசுத் தரப்புக் கட்டணத்திலோ அல்லது அதைவிட சிறிய தொகை உயர்விலோ பொதுமக்களுக்கு வழங்க முன் வந்தால் அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெளிவாகவில்லை.

காரணம், தமிழகம் முழுவதும் அரசு மட்டுமே கேபிள் டிவி தொழிலைக் கையாளும் என்றோ, அரசிடம் இருந்துதான் மற்ற இடைநிலை முகவர்கள் கனெக்ஷன்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்பதையும் அரசுத் தரப்பு இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.

ஆக, அரசும், தனியாரும் இந்தத் துறையில் போட்டியிட ஆரம்பித்தால் நிச்சயமாக தனியார் துறைதான் ஜெயிப்பார்கள்.

காரணம், ஆட்சி மாற்றம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடந்தாலும் நடக்கும் என்பதால் தனியார் துறையினர் தங்களது கட்டணங்களை அரசுகளுக்காகக் குறைத்துக் கொண்டு ஒரு அரசு நல்ல பெயர் எடுக்க ஒத்துழைப்பார்கள் என்பதை நம்ப முடியாது. அதே போல் அரசுகளும் அந்தச் சேனல்களை ஒரு அளவுக்கு மேல் நெருக்கவும் முடியாது. காரணம், மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கும் நெருக்கம் அப்படி.

ஏற்கெனவே சென்னையில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளாக நம்பப்படும் ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு போன்ற இடங்களில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கம்தான் அதிகம்.

இந்தப் பகுதிகளில் தனியார் துறையிடம் அரசுத் துறையும் போரிட வேண்டுமெனில் அவர்களும் கட்டணங்களை உயர்த்தித்தான் தீர வேண்டும்.

அதே சமயம் அந்த இடத்தில் இருக்கும் குடிசை வீடுகளில் இருக்கும் வாக்காளர் பெருமக்களை மனதில் வைத்துக் கொண்டு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான்.

Sunday, August 12, 2007

கேபிள் டிவிக்கு தனி நிறுவனம்-தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் கேபிள் டிவி தொழிலில் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. கேபிள் டிவி கட்டணங்கள் மாநிலம் முழுவதிலும் ஒரே சீராக இல்லை. அதை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட காரணங்களினாலும் அரசியல் கட்சிகளிடையே வலுத்துக் கொண்டே வந்தன. அதிலும் குறிப்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சற்று அழுத்தமாகவே செல்கின்ற இடங்களிலெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இதுவரையிலும் அப்படியொரு கருத்தே இல்லை என்ற நிலையில் இருந்த தமிழக அரசு மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, தயாநிதி மாறன் தி.மு.க.விலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு யோசனை செய்து கேபிள் டிவியை அரசே நடத்தலாம் என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டது.

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. கேபிள் டிவி தொழிலை மின்வாரியத்தின் மூலம் தமிழக அரசே நடத்தலாம் என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "தமிழக அரசு சார்பில் கேபிள் டிவி இணைப்புகள் வழங்குவதற்கென்று தனியே ஒரு நிறுவனம் அமைக்கப்படும். சென்னை நகரைப் பொறுத்தவரை, நடைமுறையில் உள்ள கேபிள் டிவியில் கட்டண சேவைகளைப் பார்க்கும் ஏற்பாட்டு முறையைச் செய்யும் எம்.எஸ்.ஓ.(பன்முக ஏற்பாட்டு முறை ஆபரேட்டர்) போல செயல்படும். தமிழகத்தின் பிற பகுதிகளில் கேபிள் டிவி ஆபரேட்டராக அந்நிறுவனமே செயல்படும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளப்படும்.." என்று கூறப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல முடிவு என்றே சொல்ல வேண்டும்.

உலக வங்கியிடம் அதிக கடன் இந்தியாவுக்கு முதல் இடம்

இந்தியாவுக்கு கடந்தாண்டு வழங்கியதைவிட இந்த ஆண்டில் 169 சதவீதம் கூடுதலாக கடன் வழங்கியுள்ளது உலக வங்கி.

இந்தியாவுக்கு இந்த ஆண்டில் சலுகை அடிப்படையிலான சர்வதேச மேம்பாட்டு கூட்டமைப்புக் கடனாக ரூ.9512 கோடியும், மறு கட்டமைப்பு மேம்பாட்டு கடனாக ரூ.6150 கோடியும் ஆக மொத்தம் ரூ.15,662 கோடியை உலக வங்கியிடம் இருந்து இந்தியா கடனாகப் பெற்றுள்ளது.

உலக வங்கியிடம் இதுவரை இந்த அளவு பெரிய தொகையை வேறு எந்த நாடும் கடனாகப் பெற்றதில்லை. அதே போல் உலக வங்கியின் தனியார் முதலீட்டுப் பிரிவு இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.2780 கோடி வழங்கியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் உலக வங்கி கடன் மூலம் இரண்டு பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தமிழகத்துக்கு நீர் நிலைகள் புனரமைப்பு, புதுப்பிப்பு, புதிதாக நிறுவுதல் போன்ற பணிகளுக்காக ரூ.1845 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு ரூ.775 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பீகாரில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.259 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் பீகாரின் கிராமப்புறங்களில் சுய நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

உலக வங்கி கடனில் கிராம கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கடன்களில் மூன்றில் ஒரு பகுதி இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களின் சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் மேலும் ரூ.260 கோடி கடனை இந்தியாவுக்கு உலக வங்கி அனுமதித்துள்ளது.

ஆந்திரா அரசின் கிராம ஏழ்மை ஒழிப்புத் திட்டத்துக்காக இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 57 லட்சம் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள கடன் தொகை மூலம், ஏழைப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றும் அவர்கள் சுய சார்பு அடைவர் என்றும் உலக வங்கி சொல்கிறது.

வாங்குங்க.. வாங்குங்க.. வாங்கிக்கிட்டே இருங்க..

கட்டப் போறது எப்படியும் நீங்க இல்லையே.. நாங்கதான..

அறிமுகம்

நேர்வழி, குறுக்கு வழி என்று எந்த வழியும் உலகில் இல்லை. ஒரே வழிதான். அது நமது அறிவைப் பயன்படுத்தும் வழி. பயன்படுத்துவதில் உள்ள வித்தியாசங்கள்தான் ஒரு மனிதனை சாணக்கியனாகவும், ஒரு மனிதனை தோல்வியுற்றவனாகவும் காட்டுகிறது.

எனக்குப் பிடித்ததை, நான் படித்ததை, நான் விரும்பியதை, நான் விரும்புவதை அப்படியே தருகிறேன். இது எனக்கொரு வித்தியாசமான அனுபவம்.. பகிர்தலை ஒருவித த்ரில்லோடு செய்யப் போகிறேன்..

ஆனால் எல்லாவற்றிலும் நேர்மையாக.. மாறாத கொள்கையாக.. இதில் சாணக்கியத்தனம் என்ற ஒன்றுமில்லை.. முயன்றால் புரிந்துவிடும் எல்லாமே.. அந்த முயற்சியில்தான் 'சமுத்திரகுப்தன்' பெற்ற வெற்றியும் இருக்கிறது..